புதுக்குடியிருப்பில் தென்பகுதியினை சேர்ந்த நால்வர் கைது!


புதுக்குடியிருப்பில் தென்பகுதியினை சேர்ந்த நால்வர் கைது!

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தென்பகுதியான கொழும்பினை சேர்ந்த நான்கு பேரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்

இந்த சம்பமவ் 02.05.23 அன்று இடம்;பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பில் பணக்கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பிணக்கு காணப்பட்ட நிலையில் பணத்தினை பெற்றுக்கொள்வதற்காக ஆள் ஒருவரை கடத்தி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் சந்தேகத்தின் பேரில் புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்களை 03.05.23 இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 16.05.23 வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *