Tuesday, April 29, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவினை சேர்ந்த சிலர் தனுஷ்கோடியில் தஞ்சம்!

முல்லைத்தீவினை சேர்ந்த சிலர் தனுஷ்கோடியில் தஞ்சம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரமணாக வாழ முடியாது மேலும் 7 பேர் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கையில் இருந்து கடல்வழியாக படகு மூலம் புறப்பட்ட, மூன்று சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் அகதிகளாக தனுஷ்கோடியை வந்தடைந்தனர்.

இலங்கையில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற் பகுதிக்கு அகதிகள் வந்திருப்பதாக அங்குள்ள மீனவர்கள் மெரைன் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்

இது தொடர்பில் தகவல் கிடைத்ததும் அங்கு சென்ற மெரைன் பொலிசார் அவர்களை மீட்டு மண்டபம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு அகதிகளாக வந்தவர்கள் இலங்கை முல்லைத்தீவு தீர்த்தக்கரை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறார்கள் உள்ளிட்ட ஏழு பேர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments