நீராவிப்பிட்டியில் இப்தார் நிகழ்வும் உலர் உணவு பொதியும் வழங்கிவைப்பு!


முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட நீராவிப்பிட்டி ஹிச்சிராபுரம் பகுதியில் இப்தார் நிகழ்வும் உலர் உணவு பொதி வழங்கும் நிகழ்வும் எக்டோ நிறுவனத்தினால் 22.04.23 அன்று சிறப்புற நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சமூக பணியினை மேற்கொண்டுவரும்  எக்டோ தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துரைபற்று  பிரதேச செயலாளர் பிரிவில் நீராவிபிட்டி கிச்ராபுரம்   கிராம பகுதியில்  முஸ்லிம் சமூகத்தினரை ஒன்றிணைத்து இப்தார் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றுள்ளது

அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள 50 முஸ்லிம் குடும்பங்களுக்கான நிவாரண பொதியும் நோன்புத் திருநாளை முன்னிட்டு எக்டோ நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *