Thursday, May 15, 2025
HomeUncategorizedஒட்டுசுட்டானில் யானை அடித்து குடும்பஸ்தர் படுகாயம்!

ஒட்டுசுட்டானில் யானை அடித்து குடும்பஸ்தர் படுகாயம்!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் இன்று 08.11.2024 காலை காட்டுயானை தாக்கியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒட்டுசுட்டான் இத்திமடு வீதியில் இன்று காலை 8.30 மணியளவில் வயல் காவலுக்காக மிதிவண்டியில் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த சம்மளங்குளம் பகுதியினை சேர்ந்த 55 அகவையுடைய இரத்தினம் மகேந்திரராசா என்பவரே யானை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த குறித்த விவசாயி ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை நாட்களாக காட்டுயானையின் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது ஒட்டுசுட்டான்,முத்தையன்கட்டு போன்ற பகுதிகளில் அதிகளவில் காட்டு யானையின் தாக்கத்தினால் விவசாயிகள் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments