மின்னல் தாக்கத்தில் பற்றி எரிந்த தென்னை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்துவருகின்றது இடிமின்னல் தாக்கம்
அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் 22.10.2024 அன்று உடையார் கட்டு சுதந்திரபுரம் சந்திக்கு அருகில் மின்னல்
தாக்குதலுக்கு இலக்கான தென்னைமரம் ஒன்று பத்தி எரியும் காட்சி பதிவாகியுள்ளது.

சுதந்திரபுரம் சந்திக்கு அருகில் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று காணப்படுகின்றது இந்த
கோபுரத்தில் தாக்கிய மின்னல் அருகில் உள்ள வீடு ஒன்றின் தென்னை மரம் ஒன்றினையும் தாக்கி
தென்னைமரம் எரியும் காட்சி காணொளியாக பதிவாகியுள்ளது.

வீட்டில் ஆட்கல் இல்லாத காரணத்தினால் வேறு எதுவும் சேதம் ஏற்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.

Admin Avatar