புதுக்குடியிருப்பில் படையிரின் விளையாட்டு போட்டி-விபத்தில் மூவர் படுகாயம்!


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பரந்தன் வீதியில் பிரதேச சபை விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் உந்துருளியில் பணித்த ஒரோ குடும்பத்தினை சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளார்கள்.

இந்த சம்பவம் 22.01.23 இன்று காலை இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள பிரதேசபை பொதுவிளையாட்டு மைதானத்தில் படையிரின் ஏற்பாட்டில் நடைபெற்று சித்திரைப்புத்தாண்டுவிளையாட்டு போட்டியின் போது வீதி போக்குவரத்தில் அதிகளவான வாகனங்கள் பயணித்துள்ளதுடன் மக்கள் நடமாட்டமும் அதிகமாக காணப்பட்டுள்ளது

இந்த நிலையில் இரண்டு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்த வாகனங்கள் மோதிக்கொண்டு முன்னால் பயணித்த உந்துருளிமீது மோதிக்கொண்டதில் உந்துருளியில் பயணித்த ஒரோகுடும்பத்தினை சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளார்கள்.

இவர்கள் புதுக்குடியிருப்பு பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிசிச்சைக்கா முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் விபத்தினை ஏற்படுத்தி இரண்டு வாகனங்களின் சாரதிகள் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையினை புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *