Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வவுனியா

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வேண்டாம் வடக்கு கிழக்கில் ஆர்ப்பாட்டம்!

வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்;றியத்தினால பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைபிரனை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று 20.04.23 வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள மாவட்டங்களில்முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினர் வேண்டாம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்ற பதாதையினை தாங்கியவாறு எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வேண்டம் என்பதை வலியுறுத்தியும் கருத்து சுதந்திரம் பயிபோகும் என்றும் இது முற்றுமுழுதாக வேண்டாம் என்பதையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரியப்படுத்தியுள்ளார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *