முல்லைத்தீவில் துண்டு பிரசுரங்களை தூக்கி வீசிய கட்சி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கையில் வாக்காளர்கள் சுமூகமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில் கட்சி ஒன்று தனது துண்டு பிரசுரங்களை முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் வீதியில் தூக்கி வீசிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
இந்த சம்வத்தினை தொடர்ந்து குறித்த கட்சியின் தேர்தல் பரப்புரை துண்டு பிரசுரங்களை பொலீசார் பொறுக்கி அப்புறப்படுத்தியுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிப்பதற்காக புத்தளம் பகுதிகளில் இருந்து பேருந்துக்களில் வாக்களார்கள் அழைத்துவரப்பட்டு வாக்களிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்கள்.மாவட்டத்தின் ஏனைய இடங்களில் மக்கள் சுமூகமான முறையில் வாக்களித்து வருகின்றார்கள்

Admin Avatar