Tuesday, April 29, 2025
HomeUncategorizedவிசுவமடு பகுதியில் இரு குழுக்குளுக்கிடையில் மோதல் நால்வர் மருத்துவமனையில்!

விசுவமடு பகுதியில் இரு குழுக்குளுக்கிடையில் மோதல் நால்வர் மருத்துவமனையில்!

விசுவமடு பகுதியில் இரு குழுக்குளுக்கிடையில் மோதல் நால்வர் மருத்துவமனையில்!

கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளான கண்ணகிநகர்,புன்னைநீராவி,தர்மபுரம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது நால்வர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்பவம் இன்று 31.07.2024 இடம்பெற்றுள்ளது.
விசுவமடு 12 ஆம் கட்டைப்பகுதியினை சேர்ந்த நபர்கள் உள்ளிட்ட குழுவினரால் மற்றைய குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது
இதன்போது கண்ணகிநகர்,புன்னைநீராவி,தர்மபுரம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 44,26,30,19 ஆகிய வயதுடையவர்கள் படுகாயமடைந்த நிலையில் தர்மபுரம் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

கிளிநொச்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகுpன்றார்கள்.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments