பாடசாலை ஆசிரியருக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடும் மாணவர்கள்!

பாடசாலை ஆசிரியருக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடும் மாணவர்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லை கல்வி வலயத்திற்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் உள்ள விடுவமடு மகாவித்தியாலத்தில் கல்வி கற்றும் ஆசிரியர் ஒருவருக்கு மாணவர்கள் ஊடாக தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றமை தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

விசுவமடு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் ஆசிரியர் ஒருவருக்கு மாணவர்கள் மற்றும் மாணவர்களின் சகாக்கள் ஊடாக தொடர்ச்சியாக தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 08.07.2024 அன்று புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறையிடப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

Admin Avatar