முல்லைத்தீவில் அமரர் சம்மந்தனுக்கு அஞ்சலி நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி நகர் பகுதியில் மறைந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தனுக்கு (04.07.2024) அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் துணுக்காய்,மாந்தை கிழக்கு பகுதி மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் பொதுச்சடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சாந்தி சிறீஸ்கந்தராயா இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏனை பகுதிகளான முல்லைத்தீவு,ஒட்டுசுட்டான்,புதுக்குடியிருப்பு ,விசுவமடு,முள்ளியவளை போன்ற பகுதிகளில் பல தமிழரசு கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் இருந்து வருகின்றார்கள் அவர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கலை தெரிவித்தாலும் ஒரு கண்ணீர் அஞ்சலி பதாகை கூட கட்டவில்லை கண்ணீர் அஞ்சலி கூட்டம் கூட நடத்தவில்லை கவலையளிக்கின்றது.

Admin Avatar