நாட்டு துவக்கு வெடித்ததில் இளைஞர் பலி!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துணுக்காய் கல்விளான் பகுதியில் இன்று இரவு (31-05-2024) உடமையில் வைத்திருந்த நாட்டு துவக்கு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

குறித்த சம்பவம் இன்று இரவு 07 மணியளவில் இடம்பெற்றுள்ளதுசம்பவத்தில் கண்ணையா அன்பழகன் (19 ) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்

உயிரிழந்தவரின் சடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Admin Avatar