முள்ளியவளையில் பாடசாலை மாணவி கர்ப்பம் கடைக்காரர் கைது!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் 14 அகவையுடைய பாடசாலை மாணவி ஒருவர் கர்ப்பம் தரித்த சந்தேகத்தில் கடை உரிமையாளர் ஒருவரை 28.05.2024 அன்று முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவி நாள்தோறும் குறித்த கடைக்கு சென்று வந்துள்ள நிலையில் உடல் சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி கர்பமாகஇருப்பது தெரிவயந்துள்ளது.

இந்த நிலையில் சிறுமியின் சட்டவைத்திய விசாரணையினை தொடர்ந்து குறித்த கடைக்காரர் சந்தேகத்தின் பேரில் முள்ளியவளை பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்;.

Admin Avatar