Monday, May 12, 2025
HomeUncategorizedவிசுவமடுவில் இருந்து பேருந்தில் யாழிற்கு கசிப்பு கடத்தல்!

விசுவமடுவில் இருந்து பேருந்தில் யாழிற்கு கசிப்பு கடத்தல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்க அரச பேருந்தில் 45 லீற்றர் கசிப்பினை சூட்சிமமான முறையில் கடத்தமுற்பட்ட வேளை தர்மபுரம் பொலீசார் இந்த நடவடிக்கையினை முறியடித்துள்ளார்கள்.

விசுவமடு பகுதியில் இருந்து அரச பேருந்தை மறித்து ஏறிய இருவர் யாழ்ப்பாணம் செல்வதற்கு சிட்டை எடுத்துள்ளார்கள் அவர்களின் பயணப்பொதியும் இதன்போது பேருந்தில் ஏற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு பயணப்பொதியில் 45 லீற்றர் கசிப்பினை பொலீத்தீன் பையில் பொதியிடப்பட்டு வைக்கப்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் தர்மபுரம் பொலீசாருக்கு கிடைத்த நிலையில் தர்மபுரம் பகுதியில் வைத்து பேருந்தினை மறித்து சோதனை செய்தவேளை 45 லீற்றர் கசிப்பினை கொண்டு செல்லமுற்பட்ட இருவரையும் கைதுசெய்ய முற்பட்ட போது அதில் ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி தப்பி ஓடமுற்பட்டுள்ளார் அவரையும் பொலீசார் துரத்திப்பிடித்துள்ளார்கள்.

இவ்வாறு பிடிக்கப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் 45 லீற்றர் கசிப்பினையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் தர்மபுரம் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments