புதுக்குடியிருப்பில் கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் படுகாயம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேவிபுரம் ஆ பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுயாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 33 அகவையுடைய குடும்பஸ்தர் இவர் மயில்குஞ்சன் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார்.

இவர் காட்டிற்குள் சென்றவேளை காட்டிற்குள் விலங்குகளை வேட்டையாடுவதற்காக கட்டப்பட்ட கட்டுத்துவக்கு வெடித்துள்ளது இதன்போது படுகாயமடைந்தவர் புதுக்குடியிருப்பு ஆதாரமருத்துவமனைகொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவர் எதற்காக காட்டிற்குள் சென்றார் கட்டுத்துவக்கு கட்டியது யார்? போன்ற விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலீசார் முன்னெடுத்து வருகின்றார்கள்.

Admin Avatar