மாங்குளம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி!

வெகுவிமர்சையாக நடைபெற்ற முல்லைத்தீவு மாங்குளம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டியானது பாடசாலையின் அதிபர் இ. கோகுலன் தலைமையில் இன்று (09.04.2024) மாலை 02.30 க்கு பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இல்ல மெய்வல்லுநர் போட்டியானது ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து அணிநடை மரியாதை விளையாட்டு நிகழ்வுகள் இடைவேளை நிகழ்ச்சிகள் பரிசில் வழங்கல் போன்றன சிறப்பாக நடைபெற்றன.

விளையாட்டு நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சி மோகன்  அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு நிலை பிரதி கல்வி பணிப்பாளர் சு. பரந்தாமன் அவர்களும் மாங்குளம் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெற்றிச் சான்றிதழ், வெற்றிப் பதக்கங்கள் மற்றும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது 

குறித்த விழையாட்டு நிகழ்வில் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள்  பழைய மாணவர்கள் பெற்றேர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

Admin Avatar