Monday, April 28, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவில் தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சி முகாம் திறந்து வைப்பு!

முல்லைத்தீவில் தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சி முகாம் திறந்து வைப்பு!

தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சி முகாம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னக்கோன் அவர்களால்  இன்று திறந்து வைப்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு படை கட்டளை தலைமையகத்தின் கீழ் நந்திக்கடல் பகுதியில்  ஸ்தாபிக்கப்பட்ட இராணுவப் படையணி பயிற்சிப் பாடசாலையானது தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சி பாடசாலையாக அமைப்பதற்காக இராணுவத்தினரால் தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

அதற்கிணங்க, இப்பயிற்சிப் பாடசாலையை தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சி பாடசாலையாக   பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னக்கோன் அவர்களால் இன்று  காலை 10. 30 மணிக்கு .  உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது

ஏற்கனவே பல்வேறு இடங்களில் பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு இதன்போது சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது

நிகழ்வின் கல்வித் திணைக்கள அதிகாரிகள்  இராணுவ உயரதிகாரிகள் வடக்கு கிழக்கை சேர்ந்த பல பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments