Monday, April 28, 2025
HomeUncategorizedதேராவில் குளத்து நீரை வெளியேற்றுவதற்கான முதற்கட்ட வேலைத்திட்டம்!

தேராவில் குளத்து நீரை வெளியேற்றுவதற்கான முதற்கட்ட வேலைத்திட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உள்ள தேராவில் குளம் கடந்த மூன்று மாங்களாக நீர் நிரம்பி காணப்படுகின்றது இவ்வாறு இந்த குளத்து நீர் மக்களின் காணிகளுக்குள் புகுந்துள்ளதால் இதுவரை 17 குடும்பங்கள் தங்கள் விடுகளில் வாழமுடியாத நிலையில் உறவினர்களின் வீடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள்.

இந்த நிலையில் குளத்து நீரினை தேக்கங்காட்டு பகுதிஊடாக வெளியேற்றுவதற்கு திட்டவரைபு என்பன முன்மொழியப்பட்டுள்ளன முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரின் முயற்சியால் அதற்கான செலவீனங்களை அரசா சார்பற்ற நிறுவனம் ஒன்று பொறுப்பெடுத்துள்ளதுடன்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வீதியில் பலாத்தினை அமைப்பதற்கான முதற்பட்ட பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன
தேராவில் தேக்கங்காட்டு வீதியில் குறுக்கறுத்து பாலம் அமைத்து தேராவில் குளத்து நீரினை வெளியேற்றும் திட்டத்திற்கான முதற்கட்ட பணிகள்; இன்று(20) தொடங்கப்பட்டுள்ளன.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை குறித்த வீதியில் பாலம் அமைபதற்கான வீதியினை தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் இதற்காக குறித்த பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்கள் வேலைப ;பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

முல்லைத்தீவு பரந்தன் வீதியில் தேராவில் தேக்கங்காட்டு வளைவு வீதியில் வீதி வேலை இடம்பெற்று வருவதால் சாரதிகள் வனத்தின் வேகத்தினை குறைத்து பயணிப்பதன் ஊடாக விபத்துக்களை தவிர்த்துக்கொள்ளலாம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments