Sunday, May 11, 2025
HomeUncategorizedபுதுக்குடியிருப்பில் யானையின் அட்டகாசம்!

புதுக்குடியிருப்பில் யானையின் அட்டகாசம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று மக்களின் வாழ்இடங்களை சேதப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் 20.01.2024 இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் மக்கள் குடியிருப்புக்களுக்குள் புகுந்து காணிகளின் வேலிகளை நாசப்படுத்தியுள்ளதுடன் கைவேலி பகுதியில் அமைந்துள் கணேசா வித்தியாலயத்தின் மதிலினை உடைத்துக்கொண்டு யானை சென்றுள்ளது.

இதனால் பாடசாலையின் முன்பக்கம் உள்ள ஒருபகுதி மாதில் முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளது.

அண்மைக்காலமாக புதுக்குடியிருப்பு கைவேலி,வேணாவில் பகுதிகளில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துவருவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments