புதுக்குடியிருப்பில் புதிதான துப்பாக்கி ரவைகள் மீட்பு?

புதுக்குடியிருப்பில் துப்பாக்கி ரவைகள் மீட்பு!

புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு பற்றைக்காடு ஒன்றிற்குள் பையில் சுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு 9 ஆம் வட்டாரம் பகுதியில் 37 ரவைகள் இவை 50 மில்லிமீற்றர் கனரகதுப்பாக்கி ரவைகள் என தெரியவந்துள்ளது. பொலீசாரின் இரகசிய தகவலுக்கு அமைய இந்த ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் புதிய ரவைகளாக காணப்படுகின்றது.
மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகளை நாளை(19) நீதிமன்றில் சமர்ப்பிக்கும் நடவடிக்கையில் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

குறித்த பகுதியினை அண்மித்த பகுதிகளில் ஏற்கனவே பாதுகாப்பு தரப்பினர் நிலைகொண்டுள்ள நிலையில் இவ்வாறான நிலையில் இந்த துப்பாக்கிரவைகள் எங்கிருந்து வந்தது என்பது எல்லோர் மத்தியிலும் கேள்வியாகியுள்ளது.

Tagged in :

Admin Avatar

More for you