Tuesday, May 13, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவு மாவட்டத்தில் கனமழையால் 1866 குடும்பங்களை சேர்ந்த 5588 பேர் பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கனமழையால் 1866 குடும்பங்களை சேர்ந்த 5588 பேர் பாதிப்பு!

19.12.23 முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1866 குடும்பங்களை சேர்ந்த 5588 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  402 குடும்பங்களை சேர்ந்த 1189 பேர் இடைத்தங்கல் முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் வெளியிடப்பட்ட தகவல் அடிப்படையில் இன்று (19) மாலை 9 மணி வரையான தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலே அம்பாள்புரம், கரும்புள்ளியான், ஒட்டறுத்தகுளம், நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், சிராட்டிகுளம், சிவபுரம், மூன்றுமுறிப்பு, பூவரசங்குளம்,விநாயகபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 286 குடும்பங்களை சேர்ந்த 952 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்குளம், பனிக்கன்குளம், பண்டாரவன்னி,கருவேலன்கண்டல், இந்துபுரம், தட்டையர்மலை, புளியங்குளம், தச்சடம்பன், கூழாமுறிப்பு ,கனகரத்தினபுரம் ,காதலியார்சமணங்குளம் ,பழம்பாசி, தண்டுவான்,ஒட்டுசுட்டான் ,பேராறு ,மணவாளன்பட்டமுறிப்பு , கணேசபுரம்,முத்துவிநாயகபுரம்  ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 484 குடும்பங்களை சேர்ந்த 1436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இதேபோன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கள்ளப்பாடு, சிலாவத்தை, செல்வபுரம், வற்றாப்பளை , தண்ணிமுறிப்பு, முள்ளியவளை தெற்கு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு ,கொக்கிளாய் வடக்கு கொக்குத்தொடுவாய் வடக்கு, செம்மலை,தண்ணீறூற்று,கணுக்கேணி மேற்கு,அளம்பில் வடக்கு,மாமூலை ,அம்பலவன்பொக்கணை,வண்ணாங்குளம் , குமாரபுரம் ,முள்ளியவளை தெற்கு, முள்ளியவளை மேற்கு ,அளம்பில் தெற்கு ,உப்புமாவெளி   ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 376 குடும்பங்களை சேர்ந்த 1160  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அணிஞ்சியன்குளம்,உயிலங்குளம், தென்னியங்குளம், கோட்டைகட்டிய குளம், ஆலங்குளம், தேராங்கண்டல், கல்விளான் ,மல்லாவி,யோகபுரம் கிழக்கு, புகழேந்திநகர், பாரதிநகர், யோகபுரம் மேற்கு, அம்பலப்பெருமாள்குளம் ,அமைதிபுரம், புத்துவெட்டுவான், பழையமுறிகண்டி, ஐயன்கன்குளம்,துணுக்காய், யோகபுரம் மத்தி, திருநகர் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 254 குடும்பங்களை சேர்ந்த 782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு மேற்கு, தேவிபுரம்,மாணிக்கபுரம்,உடையார்கட்டு வடக்கு,உடையார்கட்டு தெற்கு மற்றும் வள்ளிபுனம் மன்னாகண்டல் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 459 குடும்பங்களை சேர்ந்த 1239பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில்  7 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையிலே மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1866 குடும்பங்களை சேர்ந்த 5588 பேர் பாதிக்கப்பட்டுள்ளர்  

அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள்  ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களை சேர்ந்த 24 பேரும் புளியங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் உள்ள இடைத்தங்கல் முகாமிலும்,   பண்டாரவன்னி மற்றும் கருவேலன்கண்டல் ஆகிய கிராம அலுவலர் பிரிவில் பாதிக்கப்பட்ட 69 குடும்பங்களை சேர்ந்த 223 பேரும் கருவேலங்கண்டல் அ.த.க பாடசாலையில் உள்ள இடைத்தங்கல் முகாமிலும், கூழாமுறிப்பு கிராம அலுவலர் பிரிவில் பாதிக்கப்பட்ட 61 குடும்பங்களை சேர்ந்த 178 பேரும் கூழாமுறிப்பு அ.த.க பாடசாலையில் உள்ள இடைத்தங்கல் முகாமிலும், முத்துவிநாயகர்புரம் கிராம அலுவலர் பிரிவில் பாதிக்கப்பட்ட 45 குடும்பங்களை சேர்ந்த 131 பேரும் முத்துஐயன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயத்தில் உள்ள இடைத்தங்கல் முகாமிலும்,  பேராறு கிராம அலுவலர் பிரிவில் பாதிக்கப்பட்ட23குடும்பங்களை சேர்ந்த 65 பேரும் , பேராறு தமிழ் வித்தியாலயத்தில்   உள்ள இடைத்தங்கல் முகாமிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

இவ்வாறு  கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்குதொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 12 குடும்பத்தை சேர்ந்த 43 பேர் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்  

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மன்னாகண்டல் கிராம அலுவலர் பிரிவில் பாதிக்கப்பட்ட 402 குடும்பங்களை சேர்ந்த 1189 பேருமாக மன்னாகண்டல் அ.த.க பாடசாலையில் உள்ள இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

இவ்வாறு மாவட்டத்தில் 7  இடைத்தங்கல் முகாம்களில்  402 குடும்பங்களை சேர்ந்த 1189 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும்  பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரதேச செயலாளர்கள்   பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஊழியர்கள்,பிரதேச சபை ஊழியர்கள் ,சுகாதார ஊழியர்கள் , இராணுவத்தினர், கிராம அலுவலர்கள்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் மக்களுக்கான சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments