Friday, May 9, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்டலீக்கிற்கு தடைவிதிப்பு!

முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்டலீக்கிற்கு தடைவிதிப்பு!

முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக் இலங்கை உதைபந்தாட்ட கூட்டமைப்பினால் (FFSL ) தடைசெய்யப்பட்டுள்ளதாக இன்று(28) அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக் தொடர்பில் இலங்கை உதைபந்தாட்ட கூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.

அதுவரை முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் போட்டிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக 28.11.23 அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் முறைப்பாடு விசாரணை செய்யப்பட்டு பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை அனைத்து போட்டிகளையும் நிறுத்துமாறு மாவட்ட கால்பந்தாட்ட லீக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் நடத்தை மற்றும் நிர்வாகத்திற்கு எதிராகவும் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டில் FFSL யாப்பினை கடுமையாக மீறுவதாக தோன்று கின்றது என்றும் மாவட்ட லீக்கின் 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டுவரையான அறிக்கைகள்,நிதி அறிக்கைகள்,வருகைப்பதிவு மற்றும் நிகழ்ச்சி நிரல்கள்உள்ளிட்ட லீக் தொடர்பான அனைத்து ஆவணங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது டிசம்பர் மாதம் 8 ஆம் தலைமையகத்தில் திகதி விசாரணை நடைபெறவுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments