முல்லைத்தீவில் பொலீசாரின் நரித்தனம்-தடைகோரி நீதிமன்றத்தினை நாடிய பொலீஸ்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாளினை தடைசெய்ய பொலீசார் நீதிமன்றத்தினை நாடல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் மாவீரர் நாளினை தடைசெய்ய கோரி பொலீசார் நீதமன்றத்தினை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 13ற்கு மேற்பட்ட இடங்களில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்த மக்கள் தயாராகிக்கொண்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில் மாவீரர் நாளினை தடைசெய்ய கோரி புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு,முள்ளியவளை,ஒட்டுசுட்டான்,மாங்குளம்,மல்லாவி பொலீஸ் நிலையங்களை சேர்ந்த பொலீஸ் அதிகாரிகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினை நாடியுள்ளார்கள்.

இன்று இரவு 7.00 மணியளவில் நீதிமன்றில் சட்டத்தரணிகள் இல்லாத நிலையில் நீதிபதியிடம் இதற்கான அனுமதியினை பெறுவதற்காக பொலீசார் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

Tagged in :

Admin Avatar