வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் 18 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு!

யாழ்ப்பாணம் வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் கனடாவில் உள்ள புலம்பெயர் ஒருவரின் பிறந்த நாளில் அவரின் நிதி உதவியுடன் முல்லைத்தீவு துணுக்காய் பாண்டியன் குளம் பிரதேசத்தில் துணக்காய் தொழில்நுட்ப கலை கலாச்சார மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமையத்தின் ஒழுங்கமைப்பில் தெரிவு செய்யப்பட்ட 18 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் 19.11.23 இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த கால யுத்தச சூழ்நிலைகளின் போது பாதிக்கப்பட்டு தமது உழைப்பாளிகளான பிள்ளைகளையும் இழந்துள்ளதுடன் தனிமையிலும் மற்றும் உறவினர் வீடுகளிலும் தங்கி வாழும் வயோதிபர்கள் குடும்பத் தலைவரை இழந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளடங்களாக 18 குடும்பங்களுக்கு தற்போதைய குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

Tagged in :

Admin Avatar