Sunday, May 11, 2025
HomeUncategorizedபுதுக்குடியிருப்பில் தமிழ்இராணுவ வீரன் கஞ்சா அடித்துவிட்டு கொலைசெய்தார்!

புதுக்குடியிருப்பில் தமிழ்இராணுவ வீரன் கஞ்சா அடித்துவிட்டு கொலைசெய்தார்!

முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு மயில்குஞ்சன் பகுதியில் தமிழ் இராணுவ வீரன் ஒருவரால் அவரது உறவினர் ஒருவர் அடித்து படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் புதுக்குடியிருப்பில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்குடியிருப்பு கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பினை சேர்ந்த 67 அகவையுடைய தம்பிப்பிள்ளை மார்க்ண்டு என்பவர் அடித்து படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் 28.10.2023 அன்று இரவு 11.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.
கேப்பாபிலவு இராணுவ முகாமில் மெக்கானிக்கல் பகுதியில் கடமையாற்றும் 31 அகவையுடைய மயில்குஞ்சன் குடியிருப்பினைசேர்ந்த வராலேயே குறித்த வயோதிபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர்களுக்கிடையில் பிணக்கு ஏற்பட காரணம்
இராணுவத்தில் பணியாற்றும் குறித்த சந்தேக நபர் இராணுவத்தினரின் முகாமில் இருந்து அகற்றப்படும் இரும்புகளை விற்பனை செய்து வந்துள்ளார்கள். அதனால் ஏற்பட்ட பண பரிமாற்றம் தொடர்பிலான தகராறால் இவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.

கொலைக்குற்றம் புரிந்த தமிழ் இராணுவத்தினை சேர்ந்த நபரும் தலையில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகளில் குறித்த நபர் கஞ்சா பாவித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிவான் க.பரஞ்சோதி சம்பவ சென்று நிலமையை பார்வையிட்டதுடன்இ இது தொடர்பான முழுமையான விசாரணைக்கும் உத்தரவிட்டார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments