Wednesday, March 19, 2025
HomeUncategorizedமுள்ளியவளையில் திலீபனுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி!

முள்ளியவளையில் திலீபனுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தமிழர் தாயக பகுதிகள் மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், முள்ளியவளை பகுதியில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில்உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காய் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரின் வீதியில் 12 நாட்கள் நீராகாரம் ஏதுமின்றி உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்றாகும்.

பொதுச்சுடரினை மாவீரரின் பெற்றோர்கள் ஏற்றி வைக்க தொடர்ந்து திலீபனின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம்   செலுத்தியுள்ளார் கள் 

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் ,வினோநேகராதலிங்கம் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி செயலாளர் இ.கதிர் உள்ளிட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தியுள்ளார்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments