நந்திக்கடலில் கசிப்பு காச்சிய இளைஞன் கைது!

முல்லைத்தீவு நந்திகடல் நீர் ஏரியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு சாச்சி வியாபாரம் செய்து வந்த இளைஞன் ஒருவரை முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

https://www.youtube.com/watch?v=hIxoUfeiL2A

நந்திக்கடல் கரைப்பகுதியில் நீண்டகாலமாக சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலீசார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இளைஞன் ஒருவன் தனியாக கசிப்பினை காச்சி வந்துள்ளபோதுகையும் களவுமாக பிடித்துள்ளார்கள்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனையும் சான்று பொருட்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

Tagged in :

Admin Avatar

More for you