வவுனியா கந்தபுரம் வாணி வித்தயாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!


வவுனியா கந்தபுரம் வாணி வித்தயாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

வவுனியா மாவட்டத்தில் உள்ள கந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள வாணிவித்தியாலய பாடசாலை மாணவர்கள் 60 பேருக்கு இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் 10.08.23 அன்று வழங்கிவைக்கப்ட்டுள்ளது.

பாடசாலை நிர்வாகத்தின் கோரிக்கைக்கு அமைவாக 60 மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களும்,மற்றும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான புத்தகபைகளும்,சப்பாத்துக்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இணைப்பாளர் பொ.விவேகானந்தன் தலைமையில் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் அதிபர் வழிகாட்டல் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர்கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *