Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: March 2024

மூங்கிலாற்றில் இருந்து திருக்கேதீச்சரம் நோக்கி ஆன்மீக அறவழிப் பயணம்!

முல்லைத்தீவில் இருந்து  திருக்கேதீச்சரம் நோக்கி ஆன்மீக அறவழிப் பயணம். எதிர்வரும் சிவராத்திரி நன்னாளில் திருக்கேதீச்சரத்தை அடையும் வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு  மூங்கிலாறு கிராமத்தில் உள்ள சிவாலயத்தில் இருந்து  ஆன்மீக  பாதயாத்திரை ஒன்று  ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.. இந்த பாதயாத்திரையில் அனைவரும் பங்குபற்றி எம்பெருமானின் ஆசிகளை பெற்றுக்கொள்ளுமாறு ஏற்ப்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்வாழ்க்கை பாதையில் தடுமாறுபவர்கள்,வாழும் வழியகன்று தடுமாறி நிற்பவர்கள்,செல்வம்…

சாந்தனின் மறைவிற்கு முல்லைத்தீவில் கண்ணீர் அஞ்சலி!

சாந்தனின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முல்லைத்தீவில் கண்ணீர் அஞ்சலி பனர்கள் கட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சுதந்திரபுரம்,விசுவமடு போன்ற பகுதிகளில் கண்ணீர் அஞ்சலி பனர்கள் கட்டப்பட்டுள்ளது. தாயக செயலணியின் ஏற்பட்டில் இந்த கண்ணீர் அஞ்சலி பனர்கள் கட்டப்பட்டுள்ளன. பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த பசுந்தளிர் பெற்றெடுத்த மண்ணுக்கென 33 வருடமாய் சிறையினிலே தம்மை…

மாவட்ட செயலகத்தின் பிரதம உள்ளகக் கணக்காய்வாளராக N.சற்குனேஸ்வரன்!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் பிரதம உள்ளகக் கணக்காய்வாளராக என். சற்குனேஸ்வரன் கடமையினைப் பொறுப்பேற்ரார். இவர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பிரதம கணக்காளராக கடமையாற்றியதோடு தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் பிரதம உள்ளகக் கணக்காய்வாளராக கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இரவு 01.03.2024 இடம்பெற்ற விபத்தில் செம்மலையினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளம்பில் பகுதியில் மோட்டார் சைக்கில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிய விபத்தில் செம்மலை பகுதியினை சேர்ந்த நாகரத்தினம் யோகராசா என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார். உயிரிழந்தவரின் உடலம் மற்றும் காயமடைந்தவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து…

வனவளத்திணைக்களத்தினர் மீது தாக்குதல் முயற்சி பொலீசில் முறைப்பாடு!

வனவளத்திணைக்களத்தினர் மீது தாக்குதல் முயற்சி பொலீசில் முறைப்பாடு! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மன்னாகண்டல் வசந்தபுரம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதி ஒன்றிற்கு சென்ற மூன்று வனவளத்திணைக்கள உத்தியோகத்தர்கள் அவர்கள் கடமையில் ஈடுபட்ட வேளை அந்த பகுதிக்கு வந்த பிரதேச வாசிகள் 10 பேர் குறித்த மூன்று உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொண்டு அச்சுறுத்தியுள்ளதாக…

திருட்டு வழக்கின் சாட்சிய இளைஞன் கொலை செய்யப்பட்டாரா ?

திருட்டு ஒன்றின் சாட்சியமாக நீதிமன்றில் ஆயராக இருந்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது காணாமல் போன குறித்த இளைஞன் கடந்த 23-01-2023 இடம்பெற்ற திருட்டு வழக்கொன்றின் முக்கிய சாட்சியமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ……. முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை  கிழக்கு பிரதேசத்திற்குற்பட்ட பாண்டியன்குளம் பகுதியில் 22-01-2023…

விவசாய செய்கைக்கான அழிவு நட்டஈட்டினை பெற்றுத்தருமாறு விவசாயிகள் கோரிக்கை!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் கமக்கார அமைப்பின் கீழ் கடந்த காலபோகத்தில் ஏற்பட்ட தொடர்மழையினால் மேற்கொள்ளப்பட்ட விவசாய செய்கைக்கு அழிவு நட்டஈட்டினை பெற்றுத்தருமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கமக்கார அமைப்பினர் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள். கோம்பாவில் கமக்கார அமைப்பின் கீழ் 250 ஏக்கரில் 2023 ஆம் ஆண்டுக்கான காலபோக நெற்செய்கை கைவேலி,ஆற்றுப்பிலவு,குரங்கிருப்பான் போன்ற வயல் வெளிகளில் செய்கை பண்ணப்பட்டுள்ளது….

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியினை தடுத்து நிறுத்த திட்டம்!

வடக்கில் வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்கு நாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 8 ஆம் திகதி மகா சிவராத்திரி வழிபாட்டில் சைவ மக்கள் ஈடுபடவுள்ளார்கள் இதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பௌத்த பீடம் ஒன்று பிக்கு மார்கள் இணைந்து செயற்படவுள்ளதாக அவர்களின் முகநூலில் பதிவுகளை செய்து வருகின்றார்கள் என்று  தமிழ்தேசிய மக்கள்…

மேலதிக அரசாங்க அதிபராக -சி.ஜெயகாந்த் !

முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபராக (காணி) சி.ஜெயகாந்த்! முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராக (காணி) திரு.சி. ஜெயகாந்த் கடமையினை இன்று பொறுப்பேற்ரார். இவர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக கடமையாற்றி தற்போது மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராக ( காணி) கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 தவசீலன் மீது கடற்படை புலனாய்வாளரால் தொடரப்பட்ட வழக்கு !

முல்லைத்தீவு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது கடற்படை புலனாய்வாளரால் தொடரப்பட்ட  வழக்கு மார்ச் 28 ம் திகதி விளக்கத்துக்காக நியமிப்பு முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை முகாமின் கடற்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர்…