Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Atik

புதுக்குடியிருப்பில் ஈஸ்டர் கிண்ண மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப் போட்டி!

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு மிக சிறப்பாக நடைபெற்று வரும் நான்காவது ஈஸ்டர் கிண்ண மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப் போட்டி முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலத்தின் பழைய மாணவர்களால் வருடந்தோறும் நடாத்தப்படும் ஈஸ்டர் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இவ்வாண்டுக்கான  நான்காவது ஈஸ்டர் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்  இன்று 31.03.2024 ஈஸ்டர் திருநாளில்  காலை 07.00…

விபத்தில் உயிரிழந்த  பிராந்திய சுகாதார பணிப்பாளருக்கு அஞ்சலி!

முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் அகிலேந்திரனுக்கு அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் மாஞ்சோலை வைத்திய சாலையில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சிறீலங்கா ஜனரஜ சுகாதார சேவைப் சங்கத்தின் தலைவர் கஜேந்திரன் தலைமையில் குறித்த அஞ்சலி நிகழ்வு  இன்று (30.03.2024) பிற்பகல் 12.30 மணியளவில்  இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட…

வீட்டு காணிக்குள் பைப்லையின் செய்து சாராய விநியோகம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமூலை நீலகண்டபுரம் கிராமத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம்பெற்று வருவதாக முள்ளியவளை பொலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் தேடுதல் நடத்திய பொலீசார்வீட்டின் உரிமையாளர் ஒருவர் அவரதுகாணிக்குள் நீர் பொருத்தும் பைப்லையின் செய்த மாதிரி கோட உற்பத்தி செய்து சட்டவிரோத கசிப்பு காச்சி…

உடையார்கட்டு குளப்பகுதியில் கசிப்பு உற்பத்தி உபகரணங்களுடன் ஒருவர் கைது!

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளபகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (28.03.2024) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற கைது சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளத்தின் அருகிலுள்ள காட்டு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி இடம்பெற்று…

சாலைவீதி மாத்தளன் சந்திவரை புனரமைக்க ஏற்பாடு

இரட்டைவாய்க்கால் மாத்தளன் வரையான வீதி புனரமைத்து தருவதாக இராஜாங்க அமைச்சர் வாக்குறுதி! கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்டவர்கள் முல்லைத்தீவில் மக்கள் சந்திப்பினை நடத்தி வீதி அபிவிருத்தி செய்து தருவதாக வாக்குறுதி வழங்கியுள்ளார்கள். இராஜாயகங்க அமைச்சராக இருக்கும் சிவனேசதுரை சந்திரகாந்தன் அமைச்சு பதவியினை பொறுப்பெடுத்ததில் இருந்து இதுவே முதல் தடவையாக முல்லைத்தீவு…

கேப்பாப்பிலவு இராணுவ முகாம் முன்பாக பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

கேப்பாப்பிலவு இராணுவ முகாம் முன்பாக பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு. முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று (27.03.2024) புதன்கிழமை கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையத்திற்கு முன்பாக கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ள நிலையிலே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த இராணுவ முகாமிற்கு இராணுவ தளபதி நிகழ்வு ஒன்றில் கலந்து…

ஒட்டிசுட்டான் ஓட்டுத்தொழில்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ்!

ஒட்டிசுட்டான் ஓட்டுத்தொழில்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது! முல்லைத்தீவு மாவட்டத்தில் ஓடு,செங்கல் தயாரிக்கும் ஒட்டிசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள ஓட்டுத்தொழில்சாலை போரிற்கு பின்னர் இயங்காதநிலையில் காணப்படுகின்றது. போருக்கு முன்னர் விடுதலைப்புலிகள் காலத்தில் பண்டாரவன்னியன் ஓட்டுத்தொழில்சாலையாக ஓடு,செங்கல் என்ப உற்பத்தி செய்யப்பட்டது இதனை நம்பி பல குடும்பங்கள் வேலை செய்தார்கள் அருகில் உள்ள கூழாமுறிப்பு குழத்தில்…

தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் உறுதியான முடிவு கிடைக்கவில்லை!

தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் இதுவரை தனக்கு உறுதியான முடிவு கிடைக்கவில்லை என முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் தெரிவித்ததாக கேப்பாபுலவு  மக்கள் தெரிவித்தனர்  முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி ஜனாதிபதிக்கும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கும் கடந்த 11.03.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர். இதன்போது குறித்த…

மதுபோதையில் சென்ற குழு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் தாக்குதல்!

புதுக்குடியிருப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் தாக்குதல் -முரண்பாட்டை தேற்றிவித்த நபர்கள்! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் கார் ஒன்றில் சென்ற நால்வர் அங்கு நின்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள் இந்த சம்பவம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 25.03.2024 இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.மதுபோதையில்…

புதுக்குடியிருப்பில் சிறுமியினை கர்பமாக்கிய அத்தான்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அக்காவின் கணவரால் கர்ப்பம் தரித்த சிறுமி ஒருவர் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தானால் 15 அகவை சிறுமி கர்பமாக்கப்பட்ட சம்பவம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளுவர் புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றன இளவயது கர்பம் தரித்தல் என்பது தற்போது சமூகத்திற்குள் பெரும் சவாலாக…