Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

வீதியினை கடக்க முற்பட்ட சிறுமி வாகனம் மோதி உயிரிழப்பு!

முள்ளியவளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி பலி!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 09 அகவை சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(03) மாலை இடம்பெற்றுள்ளது.

முள்ளியவளை தண்ணீரூற்று நெடுங்கேணி வீதியில் மாமூலைப்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.பட்டா வகை வாகனம் ஒன்றுடன் மோதிய 9 அகவை  சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுமியின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வாகனத்தினை செலுத்திய சாரதி முள்ளியவளை பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்

குறித்த சிறுமி அருகில் உள்ள முந்திரிகை தோட்டம் ஒன்றில் முந்திரிவதை பொறுக்குவதற்காக சென்று வீதியினை கடக்க முற்பட்ட வேளை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் மாமூலை முள்ளியவளையினை சேர்ந்த 9 அகவையுடைய வ.டிலக்சனா என்ற சிறுமி உயிரிழந்துள்ளதுடன் பட்டா வகனத்தினை செலுத்திய திருகோணமலை தம்பலகாமம் பகுதியினை சேர்ந்த 18 அகவையுடைய சாரதி பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *