Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பு நோக்கி மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம் புரண்டது!

புதுக்குடியிருப்பு நோக்கி மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம் புரண்டது!

முல்லைத்தீவின் முள்ளியவளை பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி மரக்கடத்தில் ஈடுபட்ட வாகனம் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து தடம் புரண்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று 23.04.2024 மாலை இடம்பெற்றுள்ளது.
முள்ளியவளையில் இருந்து சட்டத்திற்கு முரணாக தேக்கமரக்குற்றிகளை ஏற்றிக்கொண்டு சென்று புதுக்குடியிருப்பு பகுதியில் முகவரியாக கொண்ட சிறிய ரக வாகனம் கேப்பாபிலவு இராணுவ படைத்தளத்திற்கு முன்னால் உள்ள வளை ஒன்றில் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வடிகாலுக்குள் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதில் பயணித்தவர்கள் தப்பி சென்ற நிலையில்  சம்பவ இடத்திற்கு விரைந்த முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
குறித்த வாகனத்தில் பெறுமிமிக்க தேக்கமரக்குற்றிகள் காணப்பட்டுள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *