Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

வன்னிவிளாங்குளம் முத்துமாரியம்மன் ஆலய எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு!

வன்னிவிளாங்குளம் முத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகதை ஒட்டி எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க வன்னிவிளாங்குளம் முத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக  விஞ்ஞாபனம் எதிர்வரும் 22. 4 .2024 நாளை  காலை 9.27 முதல் 10.27 வரை உள்ள சுப வேளையில் இடம்பெறவுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க வன்னிவிளாங்குளம் முத்துமாரியம்மன் ஆலயமானது மிக அழகான முறையிலே புனராவர்த்தனம் செய்யப்பட்டு நாளை கும்பாபிஷேகத்தை காண உள்ளது

அந்த வகையிலே கடந்த 18/4/2024 அன்று கர்மாரம்பம் இடம்பெற்று கிரிகைகள் இடம்பெற்று வருவதோடு  20 ஆம்  திகதிநேற்றும் 21 ஆம் திகதி இன்றும்   எண்ணைக்காப்பு சாத்துகின்ற வைபவம் இடம்பெற்று வருகிறது

அதனைத் தொடர்ந்து 22.4 .2024 நாளை  மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனமும் அதனை தொடர்ந்து வன்னிவிளாங்குளம் முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் 17.5.2024 அன்றும்   இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது

எனவே முத்துமாரியம்மன் அடியார்கள் அனைவரையும் ஆலய வழிபாடுகளில் கலந்து கொள்வதோடு  கும்பாபிஷேக பெரு விழாவிற்கும் கலந்து கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *