Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

இனிய வாழ்வு இல்லத்தில் மாணவர்களை இணைக்க விண்ணப்பிக்க முடியும்!

புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்லத் தில் 2024 ஆம் ஆண்டுக் கான புதிய மாணவர்களை சேர்த்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட் டுள்ளன.

பார்வை கேட்டல் மற்றும் பேச்சு குறைபாடு உள்ள பிள்ளைகளின் பெற்றோர் தமது பிள்ளைகளை இணைக்கவிரும்பின் எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன் விண்ணப்பிக் குமாறு இல்லத்தின் பொது முகாமையாளர் சு. ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்களை நேரடி யாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ சமர்ப்பிக்க

முடியுமெனவும் மாணவர்களுக்கு நிறைவான உணவு வசதி, பாதுகாப்பு டன்கூடிய தங்குமிடம், மருத் துவ வசதி போன்றவற்றுக்கு எந்தவிதமான கட்டணமும் செலுத்த தேவையில்லையெ னவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்கு பாட சாலை கல்வி மட்டுமின்றி இணைப்பாடவிதான செயற்பா டுகள் இடம்பெறுவதுடன் பெற்றோர் மாதம் ஒரு தடவை தமது பிள்ளைகளுடன் மனம் திறந்து கதைத்து மகிழ முடியு மெனவும் இல்ல பொதுமுகா மையாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *