Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அமைச்சரின் வருகை!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்காரா தலைமையில் தொழில் தகமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஒன்று எதிர்வரும் வைகாசி மாதம் 03,04,ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபை மைதானத்தில் தொழில் தகமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கீழ் குறிப்பிடும் தொழில்களில் ஈடுபடுபவர்கள் பெறுமதியான சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளமுடியும் அதாவது வெளிநாட்டு வேலைவாயப்பு பணியத்தின் ஊடாக வெளிநாட்டு பயணத்திற்கும் வேலைவாய்ப்பிற்கும் உறுதுணையாக இந்த சான்றிதழ்கள் அமையவுள்ளன.

உடனடியாக கீழ் உள்ள லிங்கிற்கு சென்று பதிவுகளை பதிவுசெய்துகொள்ளுங்கள்.

எதிர்வரும் 03.05.2024 அன்று நடைபெறவுள்ள நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக
மேசன் தொழில்,தச்சுதொழில,குழாய்பொருத்துனர்,மின்இணைப்பாளர்,கடல்சார் தொழிலாளர்,வீட்டு பணியாளர்,சுத்திகரிப்பு தொழிலாளி,முச்சக்கரவண்டி ஓட்டுனர்,தனியார் வாகனஓட்டுநர் நடத்துனர்,உணவு விநியோகித்தர்,ஊடகவியலாளர்,கையல் கலை,வர்ணபூச்சுனர்,ஒட்டும்பொருத்தும் தொழில்,அழகுக்கலை,முன்பள்ளிஆசிரியர்கள், போன்ற துறைகளில் தொழில் செய்து வருபவர்கள் சான்றிதழ் பெற விருப்பும் பயனாளிகள் கீழ் உள்ள தொலைபேசிக்கு தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 0753523624

இதேபோல் எதிர்வரும் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள சேவையில் தனிப்பட்டரீதியான தொழில் வழிகாட்டல்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,தொழில்துறை மேம்பாட்டு செயலமர்பு,தொழில் பெறுவதற்கான பயிற்சிக்கான வாய்ப்புக்கள்.. தாதி,கட்டுமானம்,சுற்றுலாமுகாமைத்துவம்,வெல்டிங்,பாரஊர்தி செயற்பாடுகள்,மின்னிணைப்பு, போன்றவற்றுக்கான பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளதுடன்இது தொடர்பில் கீழ் குறிப்பிடும் தொலைபேசிஇலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுங்கள் 0753523624
0770370966


இந்த நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு சிற்றுண்டிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *