புதுக்குடியிருப்பில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் பொலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 22 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளான்.
24.12.23 அன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் போதை மாத்திரைகள் விற்பனையாகி வருவதாக புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய பொலீசார் இந்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள்.
23 அகவையுடைய இளைஞன் 22 போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்டு 25.12.2023 இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

Tagged in :

Admin Avatar