Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

பணிப்புறக்கணிப்பால் நோயாளர்கள் அவதி!

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டமானது இன்றும் (02) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், முல்லைத்தீவு , புதுக்குடியிருப்பு வைத்தியசாலை தாதியர்களும் இன்று பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு காரணமாக, வைத்தியசாலை நோக்கி வருகைதந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

தூர பிரதேசங்களிலிருந்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தந்த முதியவர்கள், தாய்மார்கள், உள்ளிட்ட பலரும் வைத்தியசாலைக்கு வந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பி செல்வதனை அவதானிக்க முடிந்தது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *