Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

உடையார் கட்டு மகாவித்தியாலய மாணவர்களின் மரதன் ஓட்டப்போட்டி!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டு மகாவித்தியாலய மாணவர்களின் 2024 ஆம் ஆண்டு இல்ல மெய்வல்லுனர் போட்டியினை முன்னிட்டு மாணவர்களுக்கிடையிலான மரதன் ஓட்டப்போட்டி இன்று 07.03.2024 காலை நடைபெற்றுள்ளது.

ஆண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி புதுக்குடியிருப்பு சந்தியில் இருந்து உடையார்கட்டு மகாவித்தியாலயம் வரையும் பெண்களுக்கான மரன் ஓட்டப்போட்டி கைவேலி கணேசாவித்தியாலயத்திற்கு முன்பாக இருந்து உடையார் கட்டு மகாவித்தியாலயம் வரை சென்றடைந்துள்ளார்கள்.

இந்த மரதன் ஓட்டப்போட்டியில் பாடசாலையின் மாணவ மாணவிகள் என 60 வரையானவர்கள் கலந்து கொண்டு ஓடிமுடித்துள்ளார்கள்.

ஆண்கள் பெண்களில் வெற்றிபெற்ற முதல் மூன்று இடங்களையும் பெற்ற வீரர்களுக்கு பதங்கங்களும் கேடயங்களும் சான்றிதழும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளதுடன் ஓடிமுடித்த பத்துவரையான இடங்களை பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரதன் ஓட்டப்போட்டிக்கான முழுமையான நிதி அனுசரணையினை கனாடவில் வசிக்கும் கந்தசாமி பத்மநாதன் அவர்கள் வழங்கியுள்ளார்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *