புதுக்குடியிருப்பில் பாதுகாப்புக்காக வீட்டில் விடப்பட்ட சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் இளைஞன் கைது!
18-09-2025 அன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேவிபுரம் பகுதியில் வீட்டில் பாதுகாப்புக்காக விடப்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேகத்தில் 19 அகவை இளைஞர் ஒருவரை புதுக்குடியிருப்பு போலீசார் கைது செய்துள்ளார்கள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் புதுக்குடியிருப்பு தேவிபுரம் ஆ வன்னா பகுதியில் குறித்த தாயார் சிறுமியினை பாதுகாப்பிற்காக ஒரு வீட்டில் விட்டு விட்டு சென்றுள்ளார் எட்டு வயது நிரம்பிய சிறுமி குறித்த வீட்டில் இருந்த வேளை 19 அகவை உடைய இளைஞர் ஒருவர் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் தாயார் சிறுமியினை வந்து பார்த்தபோது சிறுமியின் நடவடிக்கை தொடர்பில் விசாரித்த போது இளைஞனின் விளையாட்டு தெரியாது வந்துள்ளது இந்த சம்பவத்தினை தொடர்ந்து சிறுமியின் தாயார் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய
புதுக் குடியிருப்பு போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த இளைஞரை கைது செய்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது 30-09-25 வரை விளக்கமரியில் வைக்க நீதிமன்ற முத்தரப்பட்டுள்ளது குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்