Sunday, September 7, 2025
HomeKElinochchiறெட்பானாமூங்கிலாறு விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு!

றெட்பானாமூங்கிலாறு விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட றெட்பானா பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் உடையார்கட்டுவடக்கினை சேர்ந்த 73 அகவையுடைய கதிர்காமு சண்முகநாதன் என்பவரே விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் 05.09.2025 அன்று உயிரிழந்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் றெட்பானா பகுதியில் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த வேளை உந்துருளி மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது இதன்போது காயமடைந்த நபர் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பெற்ற நிலையில் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்

இந்த நிலையில் வீட்டில் அவர் 05.09.2025 அன்று உயிரிழந்துள்ளார் இவரது உடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இவரது உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் வீட்டிற்கு சென்ற மரணவிசாரi அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

உடலம் பிரோத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது விபத்து சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணையினை புதுக்குடியிருப்பு பொலீசார் முன்னெடுத்து வருகின்றார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments