Sunday, September 7, 2025
HomeJaffnaஉடையார் கட்டு விபத்தில் புதுக்குடியிருப்பு 9ம் வட்டார இளைஞன் ப.லி!

உடையார் கட்டு விபத்தில் புதுக்குடியிருப்பு 9ம் வட்டார இளைஞன் ப.லி!

புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் புதுக்குடியிருப்பு 9 ஆம் வட்டாரபகுதியினை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் 06.09.2025 இன்று மாலை இடம்பெற்றுள்ளது.


புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் இன்று மாலை 7 மணி அளவில் யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் வீதியை குறுக்கறுத்து செல்ல முற்பட்ட மற்றும் ஒரு சிறிய மோட்டார் சைக்கிளும் மோதிஏற்பட்ட வீதி விபத்தில் மோட்டார் சைக்கிலை ஓட்டிச்சென்ற புதுக்குடியிருப்பு 9ம் வட்டாரப்பகுதியினை சேர்ந்த 22 வயதுடைய சந்திரமோகன் சானுசன் என்பவரே உயிரிழந்துள்ளார்


விபத்தில் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார் காயமடைந்த நபர் தர்மபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலை சடலத்தை கொண்டு செல்லப்பட்டுள்ளனர் இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments