யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் , மட்டக்களப்பை சேர்ந்த கடற்தொழிலாளி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.மட்டக்களப்பை சேர்ந்த சின்னத்தம்பி வடிவேல் என்பவரே உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு , சுண்டிக்குளம் பகுதியில் வெளிமாவட்ட கடற்தொழிலாளர்கள் வாடி அமைந்து , கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளார்.அந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வாடியில் இருந்த இரு கடற்தொழிலாளர்களுக்கு இடையில் , கருத்து மோதல் ஏற்பட்டு , வாள் வெட்டில் முடிந்தது.
அதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்