முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீர்த்தக்கரை பகுதியிலிருந்து நேற்று முன்தினம் (18) இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவர் மீண்டும் கரை திரும்பாத நிலையில் நேற்று (19) மீனவர்கள் குறித்த மீனவர் சென்ற மீன்பிடி படகை கடலில் இருந்து கரைக்கு கொண்டு வந்திருக்கின்ற போதும் மீனவர் இதுவரை கரை சேரவில்லை
இந்த நிலையில் மீனவரை தேடி இரண்டாவது நாளாக இன்று 20.06.2025 காலை 7.00 மணியளவில் 30 மீன்பிடி படகுகளில் 50 மீனவர்களும் கடற்படையினரின் இரண்டு படகுகளும் தோடுதல் நடத்தியுள்ளார்கள்.
முல்லைத்தீவு கடலில் மீனவர்கள் பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கும் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தும் மீனவர்களுக்கும் இடையே கடந்த காலங்களில் பிரச்சினைகள் இடம்பெற்று வந்துள்ளது., சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்துபவர்களை தடைசெய்து அவர்களை கைதுசெய்யகோரி ஏனை மீனவர்கள் பல சந்தர்ப்பங்களில் எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் திணைக்கள அதிகாரிகளுக்கு மனுக்கொடுத்தும் வந்துள்ளார்கள்.
இந்த சிக்கலான சூழ்நிலையில், மேற்கண்ட கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தும் மீனவர்களால் காணாமல் போன மீனவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் ஏனைய மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்குத் தகவல் தெரிவித்து தீர்வு காணும் பொருட்டு, இன்று கடல் பகுதிக்குச் சென்ற சுமார் 50 மீனவர்கள் கொண்ட குழு, 30 மீன்பிடி படகுகளுடன் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் முல்லைத்தீவு மீன்வள ஆய்வாளர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள கரையோர பகுதியினை அடைந்து, நடந்து சென்று மாவட்டச் செயலகத்திற்கு ஒரு கடிதத்தை ஒப்படைத்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையினை தடைசெய்யகோரி இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்கள்.