Thursday, June 19, 2025
HomeMULLAITIVUமாடுகளை இறைச்சிக்காக கடத்திய கும்பலை அதிரடியாக கைதுசெய்த புதுக்குடியிருப்பு பொலீசார்!

மாடுகளை இறைச்சிக்காக கடத்திய கும்பலை அதிரடியாக கைதுசெய்த புதுக்குடியிருப்பு பொலீசார்!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு,மூங்கிலாறு பிரதேசங்களில் தொடர்ச்சியாக மக்களின் வாழ்வாதாரமான கால்நடைகளை இறச்சிக்காக களவாடி விற்பனைசெய்யும் கும்பல் ஒன்று ஈடுபட்டுவந்துள்ளது.

இந்த கும்பல் இவ்வாறு நேற்று (18.06.2025) இரவு வாகனம் ஒன்றில் மாடுகளை திருடி ஏற்றியவேளை மக்கள் தகவல் அறிந்து புதுக்குடியிருபு பொலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்

குறித்த இடத்திற்கு விரைந்த
பொலீஸ் பரிசோதகர் வி.ரத்தினாயக்கா தலைமையிலான பொலீஸ் சாயன்ட் அ.அஜீத்(45555)  பொலீஸ்கொஸ்தாபிள் வி.டிதுசன் (107058) சம்பிக்க(6787) திஸ்சநாயக்கா (83157) உள்ளிட்டவர்கள் தலைமையிலான  குழுவினர்கள் விரைந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

வாகனம் ஒன்றில் இரண்டு மாடுகள் ஏற்றப்பட்ட நிலையில் நான்கு நபர்கள் மாடுகளை திருடியுள்ளார்கள் இருட்டுமடு கிராமத்தினை சேர்ந்த இரண்டு இளைஞர்களும்,மூங்கிலாற்று பகுதியினை சேர்ந்த இரண்டு இளைஞர்களுமே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

குறித்த வாகனமும்,இரண்டு மாடுகளில் ஒன்று வயிற்றில் கன்றுடன் காணப்படும் மாட்டினையே இவ்வாறு நால்வரும் இறைச்சிக்காக கடத்தியுள்ளார்கள் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களும் சான்று பொருட்களும் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களை 20.06.2025 நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றில்  முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு மூங்கிலாறு கிராமங்களில் நீண்டகாலமாக மக்களின் வாழ்வாதாரமான கால்நடைகள் இறைச்சிக்காக களவாடப்பட்டு வருகின்றமை தொடர்பில் மக்கள் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments