Thursday, June 5, 2025
HomeMULLAITIVUகூட்டுறவு சங்கத்தினால் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு!

கூட்டுறவு சங்கத்தினால் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு!

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள காட்டுவிநாயகர் சி.க.கூட்டுறவு சங்கத்தினால் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு 05.06.25 அன்று காட்டாவிநாயகர் சி.க.கூ.கூட்டுறவு சங்க கட்டத்தில் நடைபெற்றுள்ளது.

தலைவர் செ.கனகமணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழிலதிபர் ஆனந்தரசா கீத்தா குடும்பத்தினரும் சிறப்பு விருந்தினர்களாக முள்ளிவளை தமிழ் வித்தயாலய அதிபர் சி.மோகனதாசன்,முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் சமாச பொது முகாமையாளர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.

இதன்போது முள்ளியவளை தமிழ் வித்தியாலயத்தில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் 4பேருக்கு காட்டுவிநாயகர் கூட்டுறவு சங்கத்தினரால் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து தொழிலதிர் ஆனந்தராசா அவர்களினால் மாணவர்களுக்க ஒரு தொகுதி பணம் வழங்கி மதிப்பளித்துள்ளார்.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு,வவுனியா மாவட்டங்களில் மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கிவரும் தொழில் அதிபர் நன்கொடையாளர் ஆனந்தரசா கீத்தா குடும்பத்தினரை பாராட்டி வாழ்த்து மடல் ஒன்று கூட்டுறவு சங்கத்தினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments