Friday, June 6, 2025
HomeMULLAITIVUமுள்ளியவளையில் 10 பவுண்நகைகள் வீடு உடைத்து திருட்டு!

முள்ளியவளையில் 10 பவுண்நகைகள் வீடு உடைத்து திருட்டு!

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை மாமூலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திருடர்கள் கைவரிசையினை காட்டியுள்ளார்கள் இந்த சம்பவம் நேற்று இரவு (3) இடம்பெற்றுள்ளது.

மாமூலை பகுதியில் உள்ள வீடு ஒன்றினை உடைத்து உள்நுளைந்த திருடர்கள் வீட்டில் எவரும் இல்லாத நிலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு அறையில் அலுமாரியில் வைக்கப்பட்ட 10 பவுண் நகைகைள கொள்ளையடித்து சென்றுள்ளார்கள்.

வீட்டின் உரிமையாளர்கள் எவரும் இல்லாத சந்தர்பத்தில் இந்த கொள்ளைச்சம்பவம் பதிவாகியுள்ளது வீட்டிற்கு சென்ற வீட்டின் உரிமையாளர்கள் இதனை பார்துஅதிர்ச்சியடைந்துள்ளார்கள்  உடனடியாக முள்ளியவளை பொலீஸ் நிலையம் சென்று முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்கள் சம்பவம் தொடர்பிலான விசாரணையினை முள்ளியவளை பொலீசார் ஈடுபட்டு வருகின்றார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments