முல்லைத்தீவில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 படகுகளும் 7பேரும் கைது!
முல்லைத்தீவுகடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 படகுகளும் 7 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இன்று 04.06.2025 முல்லைத்தீவு நகர்பகுதி கடற்தொழிலாளர்களினால் முல்லைத்தீவு கடலில் சட்டவிரோதமான முறையில் ஒளிபாச்சி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 6 படகுகளையும் மீனவர்கள் 6பேரையும் முல்லைத்தீவு மீனவர்கள் கைதுசெய்துள்ளார்கள்.
இவர்களின் படகுகளை மீட்டு முல்லைத்தீவு பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். இது தொடர்பிலான சட்டநடவடிக்கையில் முல்லைத்தீவு பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.
இதேவேளை இந்த சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை தடுத்து கைதுசெய்த நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு படகு உரிமையாளர்களான முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களையும் முல்லைத்தீவு பொலீசார் கைதுசெய்து தடுத்து வைத்துள்ளார்கள்.
இதனை விட கொக்குளாய் கடற்பரப்பில் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களமும் மீனவ சங்கமும் இணைந்து நடத்திய சோதனையின் போது ஒரு படகுடன் இருவரை கைதுசெய்துள்ளார்கள் இவர்களை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம் ஈடுபட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை நிறுத்த கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை முன்வைத்துவந்துள்ளார்கள் இந்த நிலையில் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.