Saturday, May 31, 2025
HomeMULLAITIVUமீட்கப்பட்ட மனித எச்சங்கள் யாருடையது என அடையாளம் காணும் நடவடிக்கையில்!

மீட்கப்பட்ட மனித எச்சங்கள் யாருடையது என அடையாளம் காணும் நடவடிக்கையில்!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை நேற்று 29-05-25 முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி கடந்த ஆண்டு 2023 ஜூன் மாதம் 29 ஆம் திகதி இனங்காணப்பட்ட நிலையில் 3 கட்டங்களாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது 52 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் 2024 யூலை 16 ஆம் திகதியுடன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

இது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் வழக்கு இன்று 29.05.204 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

நீதிபதி த.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது காணமல் போனவர்கள் சார்பாக சட்டத்தரணி நிறஞ்சன் உள்ளிட்டவர்களும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவா ஆகியோர் மன்றில் முன்னிலையாகிஇருந்தார்கள்.

இதன்போது சட்டவைத்திய அதிகாரிகள் குழுவினால் தயாரிக்கப்பட்ட முற்றுமுழுதான அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் 52 எலும்புக்கூடுகள் தொடர்பிலான பாலினம் மரணத்திற்கான காரணம் போன்றமுக்கிய விபரங்கள் அடங்கியவை அறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலும் இறந்தவர்கள் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் அவர்களை மேலும் அடையாளம் காணும் முகமாக நீதவான் அவர்களினால் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க பிரதிநிதிகள்,காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ஆகியவற்றிற்கு அவர்களை கண்டறிய உதவுமாறு கேரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் என கருதப்படும் உயிரிழந்தவர்களின் இலக்கங்களை பத்திரிகைகளில் பிரசுரிக்க இருக்கின்றார்கள் என்றும் அதன் பின்னர் இதனுடன் தொடர்புடைய மக்கள் நீதிமன்ற பதிவாளருடன் தொடர்பு கொண்டு தெரிவிக்கும் போது மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு மீண்டும் 28.08.2025 அன்று  எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments