வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வான பாக்குத்தெண்டல் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த உற்சவமானது (26.05.2025) அதிகாலை சிறப்பாக இடம்பெற்றது.இந்த நிகழ்வு ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழாவினை தெரியப்படுத்தும் முகமாக ஆலயத்துடன் தொடர்புடைய வீடுகளுக்கு சென்று தெரிவிக்கும் சம்பிரதாய உற்சவமாக இது அமைந்துள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை ஒரு மணிக்கு அம்மன் சன்னிதானத்தில் இடம்பொற்ற பூசை வழிபாடுகள் தொடர்ந்து பாக்குத்தொண்டலுக்கு
ஆலயத்துடன் தொடர்புடைய குறித்த வீடுகளுக்கு சென்றவர்கள் முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தினை வந்தடைந்ததும் அங்கு அம்மன் சந்நிதானத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.
இந்தவகையில் எதிர்வரும் ஆனி 02 ஆம் திகதி கடல்நீர் தீர்த்தம் எடுத்தல் உற்சவமும் அதனை தொடர்ந்து ஏழு நாட்கள் முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் அம்மன் சந்நிதானத்தில் உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
காட்டாவிநாயகர் ஆலய பொங்கல் உற்சவம் எதிர்வரும் ஆனி 08 ஆம் திகதி இடம்பெறவுள்ளதோடு ஆனி 09ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.