தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்தது. 11.06.2025 இனந்தெரியாத நபர்களால் கிழித்தெறியப்பட்டிருந்தது. அதன் பின்னர் தாம் அமைத்தமைக்கான காரணத்தை குறித்த நபர் ஊடகங்களுக்கு இன்றையதினம் விளக்கமளித்திருந்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,வித்தியானந்தா கல்லூரிக்கு அருகாமை சிங்களம் கற்பிக்கும் நிலையம் ஒன்றினை நடாத்தி வருகிறேன். பொசன் போயா நிகழ்வினை எவ்வாறு கொண்டாடுவது என மாணவர்களுக்கு விளக்கமளிக்கவே பொசன் போயா நிகழ்வை வரைந்து காட்சிப்படுத்தியிருந்தேன்.
பௌத்த மதம் எவ்வாறு இலங்கைக்கு பரப்பப்பட்டது என்பதையே காட்சிப்படுத்தியிருந்தேன். அதனை சிலர் வந்து உடைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். நான் இது சம்பந்தமாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளேன்.
நான் மதத்தை பரப்புவதற்கோ அல்லது பௌத்தமதம் இங்கே வரவேண்டும் என்பதற்காக செய்யவில்லை இங்கே கற்கும் பிள்ளைகளுக்கு செயல்முறை வடிவிலே செய்து விளக்கமளிக்கவே இதை செய்தேன். வெளியே தெரியும் வகையிலே காட்சிப்படுத்தினாலே மாணவர்களால் இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும்.
மகிந்த தேரரின் வருகையும் இலங்கையில் பௌத்த மதம் ஸ்தாபித்தலும் என்றால் தேவநம்பிய தீசன் காலத்தில் மகிந்ததேரர் பிக்குணி சங்கமித்தை வருகைதந்து எவ்வாறு பௌத்த மதத்தை ஸ்தாபித்தனர் என்பது தொடர்பான படங்களுமே பதாதையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
பௌத்த மத்தினை சார்ந்தவர்கள் எவரும் இல்லாத பிரதேசமாக முள்ளியவளை பிரதேசம் காணப்படுகின்றது இந்த பிரதேசத்தில் அல்ல முல்லைத்தீவு மாவட்டத்தில் அத்துமீறி கட்டப்பட்ட பௌத்த விகாரகள் எவ்வாறு வந்த என தமிழ்மக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளார்கள்
குருந்தூர்மலை,நீராவியடிபிள்ளையார் ஆலயம் போன்ற பகுதிகளில் அத்துமீறியே பௌத்த விகாரைகள் கட்டப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ஆனால் முள்ளியவளை நகர் பகுதியில் இவ்வாறு பௌத்த மதத்தினை மக்கள் மத்தியில் காட்சிப்படுத்தி அதன் ஊடாக அதனை கண்காட்சியாக மாற்றி அந்த பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் புத்தரை கொண்டுவந்து புகுத்தும் செயலாக இது அமையுமோ என்றும் பார்க்கவேண்டிய நிலை இதன் பின்னணி தொடர்பிலும் தமிழ்மக்கள் ஆராயவேண்டிய நிலையில் உள்ளது இவ்வாறு குறித்த ஆசிரியர் சிங்கள பாடத்தினை கற்பித்து வந்தால் அதனுடன் மட்டும் நிற்கவேண்டும் மதரீதியாக ஆக்கிரமிப்பினை மேற்கொள்ளும் நடவடிக்கையாகவே இதனை பார்கவேண்டும்